Tuesday, November 17, 2009

செந்தில் பிரபு ..!!

வேலை இன்றி நாற்காலி தேய்த்த போதும்...
வேலை குவிந்தும், புரியாமல் விழித்த போதும்...
புரிந்தும், பிடிக்காமல் வெறுத்த போதும்...
பிடித்தும், தூக்கம் கண்கள் நிறைத்த போதும்...
"உன்னை போல் நானும் இருக்கிறேன்" என்று
கணினி வழியே கை நீட்டும் நண்பனே..!
இன்று நீ இல்லாமல், வேறு வழி இல்லாமல்,
வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்..!!!

Tuesday, May 27, 2008

நினைத்தேன்...

உன்னை மறக்க நினைத்தேன்...

மறந்தும் நினைத்து விடுவேனோ என்ற பயத்தில்,

தினமும் நினைத்து கொண்டிருந்தேன்,

உன்னை மறக்க வேண்டும் என்று...

Wednesday, May 7, 2008

அன்பே சிறையோ.. ?

"உனக்குள் உள்ள அன்பை வெளியில் காண்கிறாய் .."
ஆம்.. கண்டதும் மகிழ்ச்சி மட்டும் மேவுமாயின் சரி ..
ஆனால் உள்ளுக்குள் ஏனோ கிளர்ச்சி...
எங்கும் நிறைந்திருக்கும் காற்றை ஓர் பைக்குள் அடைத்து
"காற்று எனக்கே சொந்தம்" ... என்பது போல்..
உன் அன்பு முழுதும் எனக்கு மட்டுமே என்கிறேன் ..

ஆசை இல்லாமல் அன்பு மட்டும் இருந்தால்..
திர்பார்ப்புகள் இல்லாமல் சேவை மட்டும் இருந்தால்..
கடமையை செய்து பலனை எதிர்பாராத
மனதை இறைவன் கொடுத்திருந்தால்..

ஏமாற்றங்கள் இல்லை.. துன்பமும் இல்லை..
உலகம் அன்பு மயமாய்.. இன்ப மயமாய் ...
இருக்கும் நாள் என்று வருமோ..