Tuesday, November 17, 2009

செந்தில் பிரபு ..!!

வேலை இன்றி நாற்காலி தேய்த்த போதும்...
வேலை குவிந்தும், புரியாமல் விழித்த போதும்...
புரிந்தும், பிடிக்காமல் வெறுத்த போதும்...
பிடித்தும், தூக்கம் கண்கள் நிறைத்த போதும்...
"உன்னை போல் நானும் இருக்கிறேன்" என்று
கணினி வழியே கை நீட்டும் நண்பனே..!
இன்று நீ இல்லாமல், வேறு வழி இல்லாமல்,
வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்..!!!